Wednesday, August 15, 2007

ஓரு தேசிய கவிதை!

நம் காதல் தேசத்தில்…

நீ…

தேசிய மலர்!


உன் கைக்குட்டை…
தேசிய கொடி!


உன் பிறந்தநாள்…

தேசிய தினம்!


உன் பாதச்சுவடு…
தேசிய சின்னம்!


என்று கொண்டாடினேன்.

இன்றோ…

உன் மௌனமே…
தேசிய கீதமானது!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

9 comments:

  1. எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))

    ReplyDelete
  2. / வாழ்த்துக்கள்.. அருட் பெருங்கோ../

    நன்றிங்க மேடம்!!!

    ReplyDelete
  3. /எழுத்துக்கு கொடி வண்ணம் முயற்சித்ததில் வெள்ளையில் ஏதேனும் வாக்கியங்கள் தெரியாமல் போய்விட்டதா? புலம்பல் தாங்கவில்லையடா சாமி :-))/

    ஜெஸிலா,

    கொடி வண்ணமெல்லாம் இல்லைங்க எப்பவுமே இதே வண்ணம்தான!!!

    புலம்பல கேட்கிறவங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான்...என்ன பண்றது :)

    ReplyDelete
  4. / அடுத்த காதல் புலம்பல் எப்போ அருட் பெருங்கோ?/

    ்புலம்பலுக்குன்னேதான் புதன் கிழமைய ஒதுக்கி வச்சிட்டேனே மேடம் :)

    ReplyDelete
  5. ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க....

    ReplyDelete
  6. / ஆகா, ஒரு கொல (காதல்) வெறியோட தான்ப்பா திரியிறாங்க..../

    தல,

    பெயரிலேயே காதலை வத்திருக்கும் தாங்கள் மென்மையான காதல் உணர்வுகளை கொல வெறி என்று கொச்சைப்படுத்தலாமா? ;-)

    ReplyDelete
  7. காதல் முரசு ஐயா'வே,

    நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை......

    ReplyDelete
  8. / காதல் முரசு ஐயா'வே,/

    ஏன்?ஏன்??ஏன்??? எனக்கு கோபம் வந்தா அப்புறம் அழுகாச்சி வந்துடும் :)

    /நன்றாக இருக்கிறது உங்களின் இந்த கவிதை....../

    நன்றிங்க ராயல் ராம்!!!

    ReplyDelete
  9. என்ன செய்வது?
    மௌனம் சம்மதம் என்று
    தவறாக மொழி பெயர்த்த
    நீ தேசத்துரோகிதான்!

    ReplyDelete