Monday, August 13, 2007

காதல் கூடம் - 1

(ஒரு முன்குறிப்பு : நான் படித்தது ஓர் ஆண்கள் பள்ளியில்(அத பொறுக்கிப்பசங்க பள்ளிக்கூடம்னு கரூர்ல சொல்லுவாங்க :)) எனவே இது ஒரு கற்பனைக் கதைதான் என்பதை துவக்கத்திலேயே தெரிவித்து விடுகிறேன்! )




அது ஒரு வெயில்மாதத்தின்,
வெயில் பிறக்காத காலைப் பொழுது.

நம் ஊரில்
உன் கோவில் துவங்கி
மாரியம்மன் வீடு
வரையிலான பாதை
தேவதையின் பாதை.

அந்தப் பாதையெங்கும்
உன் மிதிவண்டி வேகத்தில்
நீர்க்கோலங்களை வரைந்தவண்ணம் செல்கிறது,
உன் கூந்தல் அருவி சிந்தும்
தலைக்குளியல் நீர்.

உன் வருகையை எதிர்பார்த்து
கர்ப்பகிரகத்துக்கும், வாசலுக்கும்
நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் அம்மன்.
நீ நெருங்கியதும்,
உன் நுதலில் சிறுபிறையென
குங்குமத்தை அவள் கீற்ற,
கொஞ்சமாய்ச் சிவந்தது,
குங்குமம்!

பின், அங்கிருந்து மேற்காக
ஈசுவரன் கோவிலுக்குப்
பயணமானது உன் மிதிவண்டி…
உன் தாவணி சிறகுகளை விரித்தபடி!

உனக்காக
நந்திமேல் கைவைத்தபடி காத்திருந்தான் ஈசுவரன்.
அவனிடமிருந்து திருநீற்றை சிறுகீற்றாய்
உன் நெற்றி ஏந்திக்கொள்ள
மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்புகிறது பயணம்.

நம் பள்ளியின் வாசல் அடைத்திருக்க,
அங்கே ஓய்வெடுக்க சாய்ந்தன,
மிதிவண்டியின் சக்கர கால்கள்.
படபடக்க துவங்கியது உன் இதயம்.

அதேகணம்
சிலமைல்களுக்கு அப்பாலிருந்து
சோம்பல் முறித்தபடி
தனது பயணத்தைத் துவங்கியது
எனது மிதிவண்டி.

எனக்காக என்மிதிவண்டியின் சக்கரங்களும்
உனக்காக காலத்தின் நேரமுட்களும்
வேகமாய்ச் சுழன்றன.

நானும் பள்ளிவந்து சேர்கையில்
மணியடித்து நலம் விசாரித்துக் கொண்டன
நம் மிதிவண்டிகள்.

எல்லோருக்கும்
ஒரே நாளில் பிறந்தநாள் வந்ததைப்போல
சீருடை தொலைத்து
வண்ண உடைகளில்
பள்ளிமுன் குழுமியிருந்தோம்.

நெடுநாள் நண்பனைப் போல்
எல்லோர் தோளிலும் கைபோட்டு
நின்று கொண்டிருந்தது வெயில்.

உனக்கு மட்டும் தோழியாகி
விசிறிக் கொண்டிருக்கும் தென்றல்.

நாம் எதிர்பார்த்திருந்த
பத்தாம்வகுப்பின் தேர்வுமுடிவுகள்
சற்றுநேரத்தில் ஒட்டப்படும் என்றறிந்து
உள்சென்று அமர்கிறோம்.

என்னைச் சுற்றி என் நண்பர்கள்.
உன்னைச் சுற்றி உன் தோழிகள்.

இருந்தும்,
உனக்கும் எனக்குமாக
நான்கு விழிச்சாலையில்
பார்வை போக்குவரத்து துவங்குகிறது.

வெள்ளைச் சீருடையில் சிறியவளான நீ
கத்திரிப் பூ தாவணியில் பெரியவளாயிருந்தாய்.
அம்மனும், ஈசுவரனும் நெற்றியில் முகாமிட்டிருக்க
முகமுழுக்க பவ்யமாய்க் குடியிருந்தது பயம்.

‘திருநீறு வேண்டுமா?’ எனும் பாவனையில் கை நீட்டுகிறாய்.
‘நீ வைத்துக் கொள்’ எனும் பொருளில் கை + தலை அசைக்கிறேன்.
பார்வையால் எனை அறைந்துவிட்டு
திரும்பிக்கொண்டன உன் விழிகள்.

முடிவுகள் ஒட்டப்பட்டப் பலகைகள் கொண்டுவரப்பட
எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
நெருங்குகிறோம்.

நான் 468
நீ 467

முதல் மதிப்பெண் வரிசையில்,
முதலிடம் எனக்கு.
இரண்டாமிடம் உனக்கு.

வாழ்த்திய நண்பர்கள், தோழிகள் மறைந்து
நாம் தனித்திருந்த நொடியில்
ஒரு துளி கண்ணீரும்
ஒரு புன்னகையும் சிந்துகிறாய்.
ஒன்று உனக்கு.
மற்றொன்று எனக்கு.
இரண்டையுமே ஏந்திக்கொள்கிறேன்.

பள்ளியில் இருந்து ஒன்றாய் வெளிவந்தோம்.
உனக்கு பயந்து
ஈசுவரனும், அம்மனும் எங்கோ ஒளிந்துகொண்டார்கள்.
பிரிந்து செல்கையில் சொல்லிவிட்டுப் போனாய்.
“எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”

அந்த வரியை
ஆயிரம் அர்த்தங்களுடன்
நான் உச்சரித்துப் பார்த்த
அந்தப் பௌர்ணமி இரவில்…
நிலவு, கத்திரி பூ நிறத்தில் இருந்தது.


( காதல் கூடம் - அடுத்த பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

34 comments:

  1. நல்ல தொடக்கம்....

    வாழ்த்துகள்!!!!!

    ReplyDelete
  2. / நல்ல தொடக்கம்....

    வாழ்த்துகள்!!!!!/

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க எழில்!!!

    ReplyDelete
  3. அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்.

    படங்களும் உவமைகளும் அருமையோ அருமை....

    ReplyDelete
  4. / ரொம்ப ரசிச்சு நல்லா எழுதிருக்கீங்க..ரொம்ப ரசிச்சு நானு படிச்சுட்டேன்.../

    ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க மேடம் !!!

    ReplyDelete
  5. / அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்./

    தல, நானும் ஆண்கள் பள்ளியில தான் படிச்சேன்... அதான் கற்பனைல ஒரு காதல் கூடம் கட்டலாமேன்னு இப்படி... ;)

    /படங்களும் உவமைகளும் அருமையோ அருமை....//

    அது எங்க பள்ளிக்கூடம்தான்யா... நகராட்சி மேல்நிலைப்பள்ளி யதான் காதல் கூடம்னு பேர் மாத்திட்டேன் ;)

    ReplyDelete
  6. //உன் நுதலில் சிறுபிறையென
    குங்குமத்தை அவள் கீற்ற,
    கொஞ்சமாய்ச் சிவந்தது,
    குங்குமம்///

    வெகுவாய் ரசிக்க வைத்தது!! :)

    ReplyDelete
  7. / //உன் நுதலில் சிறுபிறையென
    குங்குமத்தை அவள் கீற்ற,
    கொஞ்சமாய்ச் சிவந்தது,
    குங்குமம்///

    வெகுவாய் ரசிக்க வைத்தது!! :)/

    நன்றிங்க காயத்ரி!!!

    (குங்குமமே செவப்பாதான இருக்கும்னு லாஜிக்கா எதுவும் கேட்காம விட்டதுக்கும்...;))

    ReplyDelete
  8. கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க.....

    "எப்போவும் உனக்குப் பின்னால் நானா?" எனக்கு என்னமோ இந்த வரிகளாஇ மறு படி என்கேயோ உபயோகப் படுத்துவீங்களோன்னு தோணுது...

    படங்களும் மிக அருமையாக இருக்கிறது. ஆனா ஒண்ணே ஒண்ணுதான் பிடிக்கலை. இன்னும் ஒரு வாரம் காத்திட்டு இருக்கணும்னு சொல்றதைத்தான் சொல்றேன்.

    ReplyDelete
  9. / கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க...../

    நன்றி நந்தா!!!

    /"எப்போவும் உனக்குப் பின்னால் நானா?" எனக்கு என்னமோ இந்த வரிகளாஇ மறு படி என்கேயோ உபயோகப் படுத்துவீங்களோன்னு தோணுது.../

    ஹி ஹி இல்லையே... இல்லவே இல்லையே ;)

    /படங்களும் மிக அருமையாக இருக்கிறது. ஆனா ஒண்ணே ஒண்ணுதான் பிடிக்கலை. இன்னும் ஒரு வாரம் காத்திட்டு இருக்கணும்னு சொல்றதைத்தான் சொல்றேன்./

    என்னங்க பண்றது... என்னோட கற்பனை குதிரை, கழுதை எல்லாம் ஒரு வாரம் ஓடினா...சாரி...நடந்தாதான் என்னால ஒரு பதிவு ஒப்பேத்த முடியும்... :)))

    ReplyDelete
  10. பயணமானது உன் மிதிவண்டி…
    உன் தாவணி சிறகுகளை விரித்தபடி!
    --Ennai Velai pakka vidu ya ....... :)
    **
    பார்வையால் எனை அறைந்துவிட்டு
    திரும்பிக்கொண்டன உன் விழிகள்"
    **
    “எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”
    ** Nan Miga migaiyai rasitha vari gal......Arpudhama irukku ...Kadhal Koodathirkku En valthukkal !:)

    ReplyDelete
  11. காதல் கூடம்...அருமை...
    \\மாரியம்மனின் வீடு...
    எல்லாருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்...
    எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
    உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்//
    இதெல்லாம் எனக்கு பிடித்த வரிகள்..

    கடவுளை விட அவள் பெரிய ஆளா இருப்பா போலயே...ஏல்லாகடவுளை கும்பிட்ட அவளை விட அவ பேரை ஒரு முறை சொல்லி ஒரு மார்க் கூட வாங்கிட்டாரே ஹீரோ...

    ReplyDelete
  12. ்கவிதை ப்ரியன்,

    / பயணமானது உன் மிதிவண்டி…
    உன் தாவணி சிறகுகளை விரித்தபடி!
    --Ennai Velai pakka vidu ya ....... :)
    **/

    என்னங்க? நீங்களும் அந்த சைக்கிள் கேரியர்ல உட்காந்துட்டு போற மாதிரி கனவு வந்துடுச்சா? ஹீரோ கோவிச்சுக்குவாருங்க ;)


    /பார்வையால் எனை அறைந்துவிட்டு
    திரும்பிக்கொண்டன உன் விழிகள்"
    **
    “எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”
    ** Nan Miga migaiyai rasitha vari gal......Arpudhama irukku ...Kadhal Koodathirkku En valthukkal !:)/

    ரசித்ததற்கும், வாழ்த்தியதற்கும் என் நன்றிகள்!!!

    ReplyDelete
  13. / காதல் கூடம்...அருமை.../

    நன்றிங்கக்கா!!!

    \\மாரியம்மனின் வீடு...
    எல்லாருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்...
    எல்லாத் தெய்வங்களையும் துணைக்கழைத்தபடி நீயும்
    உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்//
    இதெல்லாம் எனக்கு பிடித்த வரிகள்..//

    நல்லா ரசிச்சிருக்கீங்க :)

    /கடவுளை விட அவள் பெரிய ஆளா இருப்பா போலயே...ஏல்லாகடவுளை கும்பிட்ட அவளை விட அவ பேரை ஒரு முறை சொல்லி ஒரு மார்க் கூட வாங்கிட்டாரே ஹீரோ.../

    heroine is the secret of hero's energy - இது காதல் விதி எண். 143 ;)

    ReplyDelete
  14. அருமை பிரதர்,
    இன்னும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும் இது காதல் பயணம் போலவே.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. / அருமை பிரதர்,
    இன்னும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும் இது காதல் பயணம் போலவே.
    வாழ்த்துக்கள்/

    நன்றி ஸ்ரீ!!!

    ReplyDelete
  16. அப்பாடா காதல் கூடம் ஆரம்பிச்சிருச்சி காதல் கற்க நானும் ரெடி நானும் பிரேம் அண்ணாச்சி(ஆண்கள் படிக்கும் பள்ளியில்) வகைதான் அதனாலதான் காதல் கூடத்துல வந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கு காதல் பாடத்தை.

    அருமையா தொடங்கிட்டீங்க வாத்தியாரே, உவமைகளும்(உண்மைகளும்) கலக்கல்.

    திங்கள்தோரும் காதல் தாரும் வாத்தியாரே....

    காதல் கூட மாணவன்
    மீறான் அன்வர்

    ReplyDelete
  17. “எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”

    என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரிந்திருந்தும் இவ்வளவு ஆர்வம் இருக்கே அதுதான் "அருட்பெருங்கோ"வின் எழுத்து நடைக்கு கிடைத்த வெற்றி.

    ReplyDelete
  18. \\உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
    நெருங்குகிறோம்.\\

    \உனக்கு பயந்து
    ஈசுவரனும், அம்மனும் எங்கோ ஒளிந்துகொண்டார்கள்.\\

    எனக்கு பிடித்த வரிகள் அருள் ;-))

    \\( மீண்டும் காதல் கூடம் வருகிற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு ;-) )\\

    இது பிடிக்காத வரி ;-) (விரைவில் எதிர்பார்க்குறேன்)

    ReplyDelete
  19. \\ பிரேம்குமார் said...
    அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்.\\

    கையை கொடுங்க பிரேம்... ;-))

    ReplyDelete
  20. /அப்பாடா காதல் கூடம் ஆரம்பிச்சிருச்சி காதல் கற்க நானும் ரெடி நானும் பிரேம் அண்ணாச்சி(ஆண்கள் படிக்கும் பள்ளியில்) வகைதான் அதனாலதான் காதல் கூடத்துல வந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கு காதல் பாடத்தை./

    அன்வர், காதல் எல்லாம் கற்றுக்கொடுக்கும் பாடமா என்ன? ;)

    /அருமையா தொடங்கிட்டீங்க வாத்தியாரே, உவமைகளும்(உண்மைகளும்) கலக்கல்.

    திங்கள்தோரும் காதல் தாரும் வாத்தியாரே....

    காதல் கூட மாணவன்
    மீறான் அன்வர்/

    தல, நானும் மாணவன் தான். வாங்க படிக்கலாம் :)

    ReplyDelete
  21. / “எப்போதுமே உன் பின்னால்தான் நானா?”

    என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரிந்திருந்தும் இவ்வளவு ஆர்வம் இருக்கே அதுதான் "அருட்பெருங்கோ"வின் எழுத்து நடைக்கு கிடைத்த வெற்றி./

    வேலு, என்ன நடக்கும்னு உங்களுக்கு இப்பவே தெரியுமா? ;) அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் :)))

    வாழ்த்துக்கு நன்றிங்க!!!

    ReplyDelete
  22. / \\உன் பெயரை ஒருமுறை உச்சரித்தபடி நானும்
    நெருங்குகிறோம்.\\

    \உனக்கு பயந்து
    ஈசுவரனும், அம்மனும் எங்கோ ஒளிந்துகொண்டார்கள்.\\

    எனக்கு பிடித்த வரிகள் அருள் ;-))/

    உங்களுக்கு வரிகள் பிடிக்குமா? ;)

    \\( மீண்டும் காதல் கூடம் வருகிற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு ;-) )\\

    இது பிடிக்காத வரி ;-) (விரைவில் எதிர்பார்க்குறேன்)/

    நான் ஆணியையும் கொஞ்சம் பாக்கனுமில்ல? ;)

    ReplyDelete
  23. / \\ பிரேம்குமார் said...
    அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்.\\

    கையை கொடுங்க பிரேம்... ;-))/

    யோவ்... நானும்தான்யா :((

    ReplyDelete
  24. \\ பிரேம்குமார் said...
    அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்.\\

    கையை கொடுங்க பிரேம்... ;-))/

    யோவ்... நானும்தான்யா :((

    Enna koduma sir ithu???????

    ReplyDelete
  25. \\மீறான் அன்வர் said...
    \\ பிரேம்குமார் said...
    அடப்போங்கப்பா, என்னை மாதிரி ஆண்கள் பள்ளியில் படித்தவர்களையெல்லாம் பொறாமைக் கொள்ள செய்யும் போலிருக்கே இந்த காதல் கூடம்.\\

    கையை கொடுங்க பிரேம்... ;-))/

    யோவ்... நானும்தான்யா :((

    Enna koduma sir ithu???????\\

    அப்படியா !!! எல்லாம் ஒரு கூட்டமா தான் திரிகிறோம் போல
    ;-(((

    ReplyDelete
  26. /Enna koduma sir ithu???????/

    கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை, அதனினும் கொடுமை முதுமையில் வறுமை னு சொல்லுவாங்க... அப்படியே ஆண்கள் பள்ளியில படிக்கிற பசங்க நெலமையும் சேர்த்துக்கலாம் ;))

    ReplyDelete
  27. /அப்படியா !!! எல்லாம் ஒரு கூட்டமா தான் திரிகிறோம் போல
    ;-(((/

    கோபி,

    அதாவது தனியா இருக்கவங்க எல்லாம் ஒரு கூட்டமா இருக்கோம்னு சொல்றீங்க :)))

    ReplyDelete
  28. அருட்பெருங்கோ, மீறான், கோபிநாத்,
    நாம ஒரு குரூப்பா தான் அலையிறோமா? ;-)

    ReplyDelete
  29. / அருட்பெருங்கோ, மீறான், கோபிநாத்,
    நாம ஒரு குரூப்பா தான் அலையிறோமா? ;-)/

    இந்த குரூப்புலயே ஆட் மேன் அவுட் நீதான் தல :-)))

    ReplyDelete
  30. //எப்போதுமே உன் பின்னால்தான் நானா?//

    சாதாரண உரைநடை,ஆனால் சொல்லப்பட்ட இடமும்,விதமும் கவிதை!!!!!

    //( மீண்டும் காதல் கூடம் வருகிற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு ;-) )//
    காதல் கூடத்துக்கு சனி,ஞாயிறு சிறப்பு வகுப்புகல் கிடையாதா?

    ReplyDelete
  31. / சாதாரண உரைநடை,ஆனால் சொல்லப்பட்ட இடமும்,விதமும் கவிதை!!!!!/

    :)) நன்றி நாடோடி இலக்கியன்!!!

    //( மீண்டும் காதல் கூடம் வருகிற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு ;-) )//
    காதல் கூடத்துக்கு சனி,ஞாயிறு சிறப்பு வகுப்புகல் கிடையாதா?/

    தினமும் இருந்தா அலுத்துவிடுமே :) வாரம் ஒரு முறை போதுங்க...

    ReplyDelete
  32. Romba nalla irukkunga....mudhal murai padikiren ungal kavidhaigalai......nejamavae romba azhaga yezhudhirukkinga......Vaazhthukkal!

    ReplyDelete
  33. / Romba nalla irukkunga....mudhal murai padikiren ungal kavidhaigalai......nejamavae romba azhaga yezhudhirukkinga......Vaazhthukkal!/

    வாழ்த்துகளுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  34. Ungal ezhuthu nadai arumai. en palli natkalai ninaivootukirathu. Pani thodarattum.

    ReplyDelete