Wednesday, August 01, 2007

நேரமிருந்தால்...

மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்
வருகிற பேருந்துக்காக காத்திருக்கும் நீ.
வந்த பேருந்தில் இறங்கிய நான்.

பூக்களும் சிரிக்கும் மணமன்றத்தில்
மௌனங்களை உதிர்த்தபடி
மணமகளின் தோழியென நீ.
மணமகனின் நண்பனாய் நான்.

நம் இரவுரயில்கள் நின்ற சந்திப்பில்
ஆவின் கடைக்கு முன்
குழந்தைக்குப் பால்வாங்க நீ.
ஒரு தேநீருக்காக நான்.

நம் பிரிவைப் போன்றே
எதிர்பாராத கணத்தில்
எங்கேனும் இப்படி நிகழக்கூடும்
நம் சந்திப்பு.

அப்போது நேரமிருந்தால்...
என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
எப்படி மறந்தாயென?

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

20 comments:

  1. //நம் பிரிவைப் போன்றே
    எதிர்பாராத கணத்தில்
    எங்கேனும் இப்படி நிகழக்கூடும்
    நம் சந்திப்பு.//

    கடவுளே!!

    //அப்போது நேரமிருந்தால்...
    என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
    எப்படி மறந்தாயென?
    //

    செமயா இருக்கு அருள்!!

    ReplyDelete
  2. / மேகம் உடைந்து அழும் ஒரு மழை நாளில்
    கூட்டம் சுமந்த பயணியர் நிழற்குடையில்///இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா..?/
    மேடம், உங்களுக்கு என்மேல இவ்வளவுப் பாசமா? :)

    / அப்போது நேரமிருந்தால்...
    என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
    எப்படி மறந்தாயென?///

    ????/

    ரெண்டு பேருமே மறந்துட்டா கவலையில்ல...ஒருத்தர் மறந்துட்டு இன்னொருத்தர் மறக்க முடியாம இருந்தா கஷ்டம் தான? அதான் சொல்ல நெனச்சேன்...

    ReplyDelete
  3. வாங்க காயத்ரி,

    //நம் பிரிவைப் போன்றே
    எதிர்பாராத கணத்தில்
    எங்கேனும் இப்படி நிகழக்கூடும்
    நம் சந்திப்பு.//

    கடவுளே!!//

    அவர ஏன் தொல்லப் பண்றீங்க?


    //அப்போது நேரமிருந்தால்...
    என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
    எப்படி மறந்தாயென?
    //

    செமயா இருக்கு அருள்!!/

    ம்ம்ம்... நன்றிங்க!!!

    ReplyDelete
  4. காலையிலேயே கண்ணுல தண்ணி :(

    பின்னிட்டீங்க!

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  6. அப்பு,

    / காலையிலேயே கண்ணுல தண்ணி :(

    பின்னிட்டீங்க! /

    என்னப்பா எல்லாருமே ஒரே சோக மயமா இருக்கீங்க... :(

    ReplyDelete
  7. / நல்லாயிருக்குங்க.../

    நன்றிங்க ஜே. கே!!!

    ReplyDelete
  8. yeppadi arul epdi elam eluthuringa, chance ela ponga,

    அப்போது நேரமிருந்தால்...
    என்னிதயத்திற்கும் சொல்லிக்கொடு.
    எப்படி மறந்தாயென?///

    summa natchu nu eruku pa, ARUL........ The BOSS,,,,,,,, super boss, & thanks

    ReplyDelete
  9. //எப்படி மறந்தாயென?//
    இப்படி கேட்க எத்தனையோ பேர் இருக்காங்க.. ஆனா பதில் சொல்லதான் யாரும் முன்வர்றது இல்லே.

    ReplyDelete
  10. அய்யா....

    ஏன் இப்படி எங்களை ரொம்ப ஃபீல் பண்ண வெக்கறீங்க.

    வரிகளில் ஏதேனும் பசையத் தடவி எழுதுவீர்களோ? படிச்சவுடனே மனசில ஒட்டிக்குது.

    கொன்னுட்டீங்க. கலக்குங்க.

    ReplyDelete
  11. வாங்க மஹா,

    / yeppadi arul epdi elam eluthuringa, chance ela ponga,/

    அதுவா வருதுங்க :)


    /summa natchu nu eruku pa, ARUL........ The BOSS,,,,,,,, super boss, & thanks/

    என் மேல் ஏனிந்த கொலவெறி? ;)

    ReplyDelete
  12. வாங்க மேடம்,

    / WHEN IS THE NEXT KAADHAL KAVITHAI?/

    கொஞம் ஆணி சேர்ந்து போச்சு... மண்டையில எதாவது தோணுச்சுன்னா திங்கட்கிழமை போட்டுடலாம்.. :)

    ReplyDelete
  13. வாங்க இளா அண்ணே,

    / //எப்படி மறந்தாயென?//
    இப்படி கேட்க எத்தனையோ பேர் இருக்காங்க.. ஆனா பதில் சொல்லதான் யாரும் முன்வர்றது இல்லே./

    சொல்ல முடியாத நிலைல அவங்களும் இருக்கலாம்... விடுங்க :)

    ReplyDelete
  14. வாங்க நந்தா,

    / அய்யா....

    ஏன் இப்படி எங்களை ரொம்ப ஃபீல் பண்ண வெக்கறீங்க.

    வரிகளில் ஏதேனும் பசையத் தடவி எழுதுவீர்களோ? படிச்சவுடனே மனசில ஒட்டிக்குது.

    கொன்னுட்டீங்க. கலக்குங்க./

    ஆகா... என்ன நந்தா அதிகமா புகழ்றீங்க...:) சரி நானும் நன்றீயே சொல்லிக்கிறேன்...;)

    ReplyDelete
  15. படிச்சுட்டு சோகமாகிடறோம்..இல்லன்னா
    அய்யோ இப்படி எல்லாம் கூட ஒரு காதல் ஜோடி சந்தோஷமா இருக்குமான்னு ..பொறாமைப்படறோம்.
    எப்படியும்
    கவிதை படிச்சுட்டு எங்களுக்கு கஷ்டம் தான் பா...:)

    ReplyDelete
  16. வாங்க முத்துலெட்சுமி,

    / படிச்சுட்டு சோகமாகிடறோம்..இல்லன்னா
    அய்யோ இப்படி எல்லாம் கூட ஒரு காதல் ஜோடி சந்தோஷமா இருக்குமான்னு ..பொறாமைப்படறோம்.
    எப்படியும்
    கவிதை படிச்சுட்டு எங்களுக்கு கஷ்டம் தான் பா...:)/

    அப்படின்னா இனிமே உங்களக் கஷ்டப்படுத்தாம கவிதை எழுதனுமா??? அது கஷ்டம்தான் ;)

    ReplyDelete
  17. Adu yeppadeenga....kadhaloda sugathai & valiyai (pain)patriyum ezhudhureenga.!!unga kavidhai dhan enakku yeppavum relax(am a software professional!!)kadhalika padavendiya kavaidhai.... :)

    ReplyDelete
  18. வாங்க கவிதை ப்ரியன்,

    /Adu yeppadeenga....kadhaloda sugathai & valiyai (pain)patriyum ezhudhureenga.!!/

    கண்டது கொஞ்சம்...கற்பனை கொஞ்சம்...

    /unga kavidhai dhan enakku yeppavum relax(am a software professional!!)/

    நானும்தான்... ஆனா வெளிய சொன்னா யாரும் நம்பறதில்ல...:)

    /kadhalika padavendiya kavaidhai.... :)/

    நன்றிங்க !!!

    ReplyDelete
  19. hai arul.. kalakitenga no words 2 say man.. it's amazing ungaloda ovoru varthailayu kathal eruku i njoy & lov it..

    ReplyDelete
  20. / hai arul.. kalakitenga no words 2 say man.. it's amazing ungaloda ovoru varthailayu kathal eruku i njoy & lov it../

    நன்றிங்க சரணியா!!!

    ReplyDelete