Thursday, July 29, 2010

கிளி ஜோதிடம்

மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
[caption id="attachment_440" align="alignright" width="300" caption="கிளி ஜோதிடம்"]கிளி ஜோதிடம்[/caption]

Wednesday, July 28, 2010

இந்தியாவில் இரண்டு நிலா

வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல![caption id="attachment_434" align="alignright" width="300" caption="மித்ரா-ஜனனி"]மித்ரா-ஜனனி[/caption]

Tuesday, July 27, 2010

பழைய பேருந்து நிலையம்

ஊருக்கு புதிய பேருந்துநிலையம் வந்ததிலிருந்து நிறைய மாற்றங்கள்.
பிரபலமான உணவகங்களும் விடுதிகளும் புதிய பேருந்துநிலையமருகே இடம்பிடித்தன.
மிகப்பெரிய விளம்பரப் பலகைகளும், கட்டவுட்டுகளும் கூட இடம்பெயரத் துவங்கின.
ஊருக்குள் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டிருந்தது. [caption id="attachment_430" align="alignright" width="300" caption="பேருந்து நிலையம்"]பேருந்து நிலையம்[/caption]

Monday, July 26, 2010

போடா கருவாயா

அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

[caption id="attachment_421" align="alignright" width="300" caption="போடா கருவாயா"]போடா கருவாயா[/caption]

Thursday, July 22, 2010

கவிதைகள்

கவிதைகள் கண்டெடுத்து வாசிப்பதென்பது
கனவுகளை மீட்டெடுப்பதைப் போல‌
மிக நுட்பமான செயலாகிவிட்ட‍து.

எல்லாக்கவிதைகளும் முதன்முறை வாசிக்கும்பொழுதே ஈர்த்துவிடுவதில்லை.
ஈர்த்த எல்லாக்கவிதைகளும் மறுவாசிப்பில் நிலைப்ப‌தில்லை.

[caption id="attachment_416" align="alignright" width="300" caption="கவிதைகள்"]கவிதைகள்[/caption]

Monday, July 19, 2010

க‌ளவாடிய கவிதைகள்

[caption id="attachment_412" align="alignright" width="300" caption="க‌ளவாடிய கவிதைகள்"]க‌ளவாடிய கவிதைகள்[/caption]மொட்டுக்க‍ள் பூக்க‍ட்டுமென நீரில் விட்டுவைக்கிறாய்.
உன் கூந்தலேறியதும் அவை இளமை திரும்பி
மீண்டும் மொட்டுக்க‍ளாவது உனக்கு தெரியுமா?
o0o
கடலுக்கும் கரைக்குமான எல்லையை
வரைய முடியாமல் தத்த‍ளிக்கிறது அலை...
நட்புக்கும் காதலுக்குமான எல்லையை
வரையறுக்க‍ இயலாத இதயம்போல!