Thursday, March 22, 2007

அன்புள்ள காதலிக்கு…

நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்... நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?


நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.
உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.
பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.
வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.
சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.
மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!


மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.
மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.
மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

42 comments:

  1. அழகாய் எழுதியிருக்கிறீர்கள்...

    //மழையில் நனைந்ததும்,
    மேகத்தைத் துவட்டிக்
    கொள்கிறாய்!//


    மேகத்தை துவட்டுகிறாளா? மேகத்தால் துவட்டிக்கொள்கிறாளா? சரியாய் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  2. ஆஆஆஹ்... முடியல... இந்த பக்கம் வந்தா காதல் காத்து இல்ல இல்ல காதல் புயல் பயங்கரமா அடிக்குது. இதுக்கு மேலயும் காதலி இல்லைனு சொன்னா அது பச்ச பொய்யி.

    அப்புறம் படக்கவிதை ரொம்ப சூப்பரப்பு. உங்களை லூசுனுதான் கூப்பிடுவாங்களோ??? ;)

    ReplyDelete
  3. காதல் முரசின் காதல் தவிப்பா?
    இவை எல்லாவற்றையும் நீங்கள் சொல்லி கேட்க சீக்கிரம் ஒரு தேவதை வருவாள்..

    ( நானும் அடிக்கடி இப்படி சொல்லிக்கிட்டே இருக்கேன்.. தேவதை வந்துவிட்டால் எங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் தானே?)

    வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்!

    மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!

    அழகான வரிகள்

    மழையையும் காதலையும் ஒப்பிட்டு சொன்னது அருமை. வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
  4. hi Arut,
    hope this post finds you in good health.
    i thought that you started working out for inauguration of homepage tomorrow.
    happy happy birthday dear....
    let god brings all the wealth and prosperity to you this year....
    try to get a girl so that your work will hike more(as vairamuthu said).

    HAPPY BIRTHDAY DEAR.....

    ReplyDelete
  5. மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!


    romba romba azhaga irruku...really beautiful....

    ReplyDelete
  6. கவிதை நன்று. எனக்கு ஒரு குழப்பம்,

    //பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?//

    மறுபடி பூப்பது மங்கையின் புன்னகையா? அல்லது அந்த பூவா? ஏனென்றால் பறித்த பிறகு பூ வாடத்தானே செய்யும்....

    ReplyDelete
  7. கலக்கல்...

    பேனாவிலயே இவ்வளவு காதல் சிந்தியிருந்தா... மனசுக்குள்ள ..!

    சென்ஷி

    ReplyDelete
  8. அழகான வரிகள் அருள்...

    எல்லோரும் சொல்வது போல் சீக்கிரம் அந்த தேவதைக்கு இந்த கவிதை கடிதம் போய் சேர என் வாழ்த்துக்கள் ;-)))

    ReplyDelete
  9. //மழையில் நனைந்ததும்,
    மேகத்தைத் துவட்டிக்
    கொள்கிறாய்!//

    could not understand these lines.
    but totally superb.
    all the best

    ReplyDelete
  10. //பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? //

    அதான எவன் சொன்னான்.

    //மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
    எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?//

    வருவாங்க. கூடிய சீக்கிரம் வருவாங்க.

    என்னா இப்பயே காதல் புயல் தாங்கலை. இன்னும் ஆள் எல்லாம் கிடைச்சுட்டா எங்க பாடு அவ்வளவுதான்.

    //மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
    மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
    உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
    காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
    மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
    மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.//

    எப்படி எப்படி எல்லாம் எழுதறாங்கப்பா. கலக்கிட்டீங்க போங்க.

    ReplyDelete
  11. ////மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.///


    மிகவும் ரசித்த வரிகள்...!!!

    ReplyDelete
  12. Hi,

    Really nice lyrics.
    Ur lover is more lucky than any one.
    Have a nice day.

    Bye.
    Regards,
    Geetha.

    ReplyDelete
  13. //மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!//


    அருட்பெருங்கோ நல்லா இருக்கு !

    ReplyDelete
  14. @ அபிமன்யு

    /அழகாய் எழுதியிருக்கிறீர்கள்...
    /

    Thanks!!!

    /மேகத்தை துவட்டுகிறாளா? மேகத்தால் துவட்டிக்கொள்கிறாளா? சரியாய் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. /

    mEgam maadhiri irukkira koondhalai thuvattik kolgiraal ;-)

    ReplyDelete
  15. அழகோ அழகு..

    ரொம்ப நல்லாயிருக்கு..

    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  16. //ஆஆஆஹ்... முடியல... இந்த பக்கம் வந்தா காதல் காத்து இல்ல இல்ல காதல் புயல் பயங்கரமா அடிக்குது. //

    அதுக்காக வராம இருந்துடாதீங்க!!!

    //இதுக்கு மேலயும் காதலி இல்லைனு சொன்னா அது பச்ச பொய்யி. //

    நோ கமென்ட்ஸ் :-))) & :-((( [சிரிக்கிறதா இல்ல அழுகிறதானு தெரியல :-?]

    //அப்புறம் படக்கவிதை ரொம்ப சூப்பரப்பு. உங்களை லூசுனுதான் கூப்பிடுவாங்களோ??? ;) //

    அட எல்லாருமே அப்படிதான் கூப்பிடறாங்க... நீங்க வேற!!!

    ReplyDelete
  17. I liked very much dear, I had never seen like this in my life. Now my heart fulled with lot of happiness. Really nice lyrics.
    Ur lover is more lucky than any one.

    GOOOOOOOOD I like you dear

    Stalin

    ReplyDelete
  18. Hi friend

    I like your nodi kavithai.


    regards
    ravi

    ReplyDelete
  19. Ennna alaigal kondu
    Ennai viyakka vaikkum
    Arul tharum perum ko maganey
    Nin Ezhuthu kandu viyanthyen.

    Vaazhga Valamuda.

    Annan
    ahamedraja

    ReplyDelete
  20. மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தமிழும் முத்தத்தமிழாய்த் தித்திப்பதும் யாரேலே! உண்மையைச் சொல்லி விடு அருட்பெருங்கோ! ஏனென்றால் உண்மை சுடும். அதுவும் உன்னைச் சுடும். ;-)

    ReplyDelete
  21. All ur writings are really superb.
    Hope u have been caught between the teeth of "love".All the best for both - success in writings and also in love

    ReplyDelete
  22. இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
    எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…

    kadhalai ithai vida azhagaai solla mudiyathu endru ninaikkiren....

    athai unarndhavargalukku thaan ippadiyellam ezhutha mudiyuma enna...

    theriyavillai...

    Really doing a great job..

    ReplyDelete
  23. வாங்க ப்ரேம்,

    /காதல் முரசின் காதல் தவிப்பா?
    இவை எல்லாவற்றையும் நீங்கள் சொல்லி கேட்க சீக்கிரம் ஒரு தேவதை வருவாள்../

    வாழ்த்தே இனிப்பா இருக்குங்க, நன்றி!!!

    /( நானும் அடிக்கடி இப்படி சொல்லிக்கிட்டே இருக்கேன்.. தேவதை வந்துவிட்டால் எங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் தானே?)/

    அடப்பாவிகளா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பேர் வைக்கிறதா...??
    எல்லாம் நடக்கட்டும்ப்பா அப்புறம் பார்க்கலாம் ;)

    /வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்!

    மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!

    அழகான வரிகள்/

    அழகான வரிகள் தான், கவிதையிலும், "கவிதை"யின் உதட்டிலும் :)

    /மழையையும் காதலையும் ஒப்பிட்டு சொன்னது அருமை. வாழ்த்துக்கள் தோழா/

    வாழ்த்துக்கு நன்றி நண்பா!!!

    ReplyDelete
  24. வாங்க குணா,

    வாழ்த்துக்களுக்கு மிக் மிக நன்றி!!! ரொம்ப தாமதமா நன்றி சொல்றேன் மன்னிச்சுக்குங்க...

    வேலை அதிகமாகிடுச்சு... அதான் ப்ளாக் பக்கம் வர முடியல..

    ReplyDelete
  25. /மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!


    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...ரெஅல்ல்ய் பெஔடிfஉல்.... /

    பாராட்டினவங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  26. /கவிதை நன்று. எனக்கு ஒரு குழப்பம்,

    //பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?//

    மறுபடி பூப்பது மங்கையின் புன்னகையா? அல்லது அந்த பூவா? ஏனென்றால் பறித்த பிறகு பூ வாடத்தானே செய்யும்.... /

    என்னங்க இசக்கிமுத்து இப்படி கேட்டுட்டீங்க?
    மறுபடி பூப்பதும் அந்த பூவே தான்... பறித்த பிறகு பூ வாடதான் செய்யும் செடிய விட்டுப் பிரியறோமேன்னு... ஆனா பிறகு ஒரு தேவதையோட கூந்தலுக்குப் போகப்போறோம்னு தெரிஞ்சதும் மறுபடியும் ஒருமுறைப் பூத்துடும் ;)

    (அதெப்படி? நு திரும்பவும் கேட்டீங்கன்னா சத்தியமா எனக்கு பதில் சொல்லத் தெரியாது :-))

    ReplyDelete
  27. வாங்க சென்ஷி,

    /கலக்கல்...

    பேனாவிலயே இவ்வளவு காதல் சிந்தியிருந்தா... மனசுக்குள்ள ..!

    சென்ஷி /

    பேனாவிலயா? இ கலப்பைல ;) இங்க தான் சிந்தியிருக்கு...

    மனசுக்குள்ள எல்லாம் சிந்தாம பத்திரமா சேமிச்சு வச்சிருக்கேன் ;)

    ReplyDelete
  28. கா பி,

    /யொவ் எங்கய்ய இருகீரு ஆலையே கானோம்?/

    மும்பைல வந்து மாட்டிக்கிட்டேன் :(

    ReplyDelete
  29. "மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!"

    நையினா,
    சும்மா தூள் கெளப்புறப்பா!!!
    ம்...ம்...ம்...
    நடத்து நடத்து,
    உங்காட்டுல செம மழதான் போல!
    ;-)

    ReplyDelete
  30. வாங்க கோபி,

    /அழகான வரிகள் அருள்.../
    நன்றிகள்!!!

    /எல்லோரும் சொல்வது போல் சீக்கிரம் அந்த தேவதைக்கு இந்த கவிதை கடிதம் போய் சேர என் வாழ்த்துக்கள் ;-)))/

    ம்ம்ம்ம்ம்ம்ம் :))))

    ReplyDelete
  31. வாங்க ராதா,

    //மழையில் நனைந்ததும்,
    மேகத்தைத் துவட்டிக்
    கொள்கிறாய்!//

    could not understand these lines.
    but totally superb.
    all the best

    ஒன்னுமில்லங்க... அவங்க கூந்தல் மேகம் மாதிரி இருக்குன்னு சொல்றாரு

    ReplyDelete
  32. வாங்க நந்தா,

    //பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது?

    அதான எவன் சொன்னான். //

    அதான் அவன மூடன்னு திட்டிட்டேன் ;)

    //மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.
    எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?//

    வருவாங்க. கூடிய சீக்கிரம் வருவாங்க.

    என்னா இப்பயே காதல் புயல் தாங்கலை. இன்னும் ஆள் எல்லாம் கிடைச்சுட்டா எங்க பாடு அவ்வளவுதான். //

    வாழ்த்தெல்லாம் பலமா இருக்கு... பார்ப்போம்...

    அப்புறமென்ன புயல் எல்லாம் தென்றலா அடங்கிடும் ;)

    //மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
    மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.
    உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.
    காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.
    மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.
    மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.//

    எப்படி எப்படி எல்லாம் எழுதறாங்கப்பா. கலக்கிட்டீங்க போங்க. //

    எப்படி எப்படி எல்லாம் பொலம்ப வைக்கிறங்க ந்னு பாருங்க... ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலையக் கொடுத்திருந்தா நான் இதையெலாம் எழுதியிருப்பனா?

    ReplyDelete
  33. ////மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.///


    மிகவும் ரசித்த வரிகள்...!!! //

    வாங்க ரவி,

    என்ன ரொம்ப நனைஞ்சுட்டீங்களோ??? (மழையில ;))

    ReplyDelete
  34. vaanga geetha,

    /Hi,

    Really nice lyrics.
    Ur lover is more lucky than any one.
    Have a nice day.

    Bye.
    Regards,
    Geetha. /

    ம்ம்ம்ம்ம்ம் வர்றவங்க எல்லாம் இப்படி உசுப்பேத்திட்டே போறாங்க... எனக்கென்னமோ ரணகளமா ஆக போகுதுன்னு தோணுது :)

    ReplyDelete
  35. //மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!//


    அருட்பெருங்கோ நல்லா இருக்கு ! /

    ரொம்ப நன்றிங்க கோவி!!!

    ReplyDelete
  36. /அழகோ அழகு..

    ரொம்ப நல்லாயிருக்கு..

    சூர்யா
    துபாய்
    புட்டெர்fல்ய்சுர்ய@க்மைல்.cஒம் /

    வந்து படித்து பாராட்டியதற்கு நன்றி சூர்யா!!!

    ReplyDelete
  37. /I liked very much dear, I had never seen like this in my life. Now my heart fulled with lot of happiness. Really nice lyrics./

    வாங்க ஸ்டாலின்,

    என்னோட கவிதைகள் உங்களையும் மகிழ்ச்சிப் படுத்தினதுல எனக்கும் மகிழ்ச்சிதான்!!!

    /Ur lover is more lucky than any one.

    GOOOOOOOOD I like you dear/

    :-))))))))) நன்றிங்க!!!

    /Hi friend

    I like your nodi kavithai.


    regards
    ravi /

    ரொம்ப நன்றிங்க ரவி...
    இன்னும் கொஞ்சம் நொடிக்கவிதைகள் எழுதனும்...

    /Ennna alaigal kondu
    Ennai viyakka vaikkum
    Arul tharum perum ko maganey
    Nin Ezhuthu kandu viyanthyen.

    Vaazhga Valamuda.

    Annan
    ahamedraja/

    வாங்க அகமது அண்ணா,

    என் கவிதைகள் வாசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி...
    தொடர்ந்து வாசிங்க...

    ReplyDelete
  38. வாங்க ஜிரா,

    /மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தமிழும் முத்தத்தமிழாய்த் தித்திப்பதும் யாரேலே! உண்மையைச் சொல்லி விடு அருட்பெருங்கோ! ஏனென்றால் உண்மை சுடும். அதுவும் உன்னைச் சுடும். ;-)/

    ராகவன், நான் ரொம்ப நல்லப் பையன்னு உங்களுக்கேத் தெரியும்ல அப்புறம் ஏன் எப்படி? :-)))

    /All ur writings are really superb.
    Hope u have been caught between the teeth of "love".All the best for both - success in writings and also in love /

    வாங்க சூர்யா,

    உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!!!

    /இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
    எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…

    காதலை இதை விட அழகாய் சொல்ல முடியது என்று நினைக்கிறேன்....

    அதை உனர்ந்தவர்களுக்கு தான் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்ன...

    தெரியவில்லை...

    றெஅல்ல்ய் டொஇங் அ க்ரெஅட் ஜொப்.. /

    எனக்கும் தெரியவில்லை :)
    வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!!!

    ReplyDelete
  39. வாங்க மாசிலா,

    /"மழையில் குடை…
    குடைக்குள் நாம்…
    நமக்குள் மழை!"

    நையினா,
    சும்மா தூள் கெளப்புறப்பா!!!
    ம்...ம்...ம்...
    நடத்து நடத்து,
    உங்காட்டுல செம மழதான் போல!
    ;-) /

    தலைவா,
    ரொம்ப நன்றிங்க...
    என் காட்டுல வெயில் தாங்க அடிக்குது... மழைக்கான அறிகுறியே காணோம்...

    ReplyDelete
  40. ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்
    சாரி சாரி
    ரொம்ப நல்லா காதல் கவிதை எழுதி இருக்கீர்கள்

    ReplyDelete
  41. வாங்க சூசன்,

    / ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்
    சாரி சாரி
    ரொம்ப நல்லா காதல் கவிதை எழுதி இருக்கீர்கள்/

    ம்ம்ம் :))) நன்றிங்க!!!

    ReplyDelete