Tuesday, January 30, 2007

படம் பார்த்துக் கதை கேளுங்க

இது தான் அமராவதி ஆறு.முன்பெல்லாம் ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.
பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது. எப்போதாவது மழை வந்து ஆற்றை கழுவி விட்டுப் போகும். அப்போது மட்டும் ஆற்றில் ஊற்றுத் தோண்டி குளிக்கலாம். அப்புறம் ஆற்றில் இறங்கிவிட்டாலே வீட்டில் வந்து ஒருமுறை குளிக்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இப்போது இரண்டாண்டுகளாக பரவாயில்லை கொஞ்சமாகவேனும் தண்ணீர் ஓடிக் கொண்டு இருக்கிறது. நான் பார்க்கும்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். சுத்தமாகதான் இருக்கும்போல ;-)

இதுதாங்க நான் பள்ளிவாழ்க்கையின் கடைசி மூன்றாண்டுகள் போய் வந்த பள்ளிக்கூடம். ( படித்த பள்ளிக்கூடம் என்று பொய் சொல்ல விருப்பமில்லை ;-) ) திரு. வா. செ. குழந்தைசாமியும் இங்கே படித்திருக்கிறார். ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார். நூற்றாண்டு கண்ட பழமையானப் பள்ளிகளுள் இதுவும் ஒன்று. தேய்த்து தேய்த்து வழுவழுப்பாகிப்போன மரப்பெஞ்சுகள், மரப்படிகள், அந்தக்கால மச்சு என இன்னும் பழமை மாறாத பள்ளி!




கரூர் பசுபதீசுவரர் கோயில் கோபுரம். இதுவரை ஒரே ஒரு முறைதான் உள்ளே சென்றிருக்கிறேன். வரலாற்று(?) செய்திகளை நிறையப் படங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பொறுமையாகப் படித்தால் கொஞ்சம் பழையக் கதைகளைத் தெரிந்து கொள்ளலாம். உள்ளே கரூர்ச் சித்தர் என்பவரின் சமாதியும் உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்ட திருமுக்கூடலூரும் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் , ஆனால் நேரமில்லை :-(





எங்கள் பள்ளிக்கூடத்தில் முதல் பாடவேளையிலேயே வருகைப் பதிவெல்லாம் முடிந்துவிடும். அப்புறம் யார் எங்கு போகிறார்கள் என்றெல்லாம் யாரும் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையெல்லாம் சாதாரணமாக மூன்றிலக்க எண்ணில்தான் இருக்கும். எங்கள் வகுப்பில் 10 வதில் 80 பேர் இருந்தோம். 11, 12 ம் வகுப்பில் 120 பேருக்கு மேல்!!! அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியரும் கண்டிப்பாக இருப்பதில்லை. அதனால் முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன். இதுதான் பழைய ரயில்வே நிலையம் இருந்த இடம். படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைதியாக இருக்கும். பள்ளிநேரத்தில் பாதிப்பொழுது இங்கேதான் கழிந்தது.

தாந்தோன்றிமலையில் உள்ள பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குப் போகிற வழியில் ஒரு முனியாண்டி விலாஸ் உணவகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை என்று வீட்டில் அசைவம் கிடைக்காத நாட்களில் நமக்கு விருந்து வைக்கும் இடம் அது.





இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.





கரூரில் பெரியாருக்கு சிலையில்லாத குறை சிலவருடங்களுக்கு முன்புதான் தீர்ந்தது. முதலில் மார்பளவு சிலையாக வைத்தார்கள்; அண்மையில் ஒரு பேருந்து மோதியதில் அதுவும் சிதைந்து போகவும், பிறகு முழு உருவச்சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. சிலை வைத்தவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.







அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

17 comments:

  1. "ஊர் சுற்றலாம் வாங்க" program மாதிரி இருக்கு...

    //ஆற்றில் குளிக்கிற அளவுக்கு தண்ணீரும் போகுமாம், சுத்தமாகவும் இருக்குமாம்.பிறகு சாயப்பட்டறைகள் பெருகி சாயக்கழிவுகள் கலந்து ஆறு நாறிப்போனது.//

    இப்படி அக்கறையே இல்லாம இருக்காங்களே... மாத்த முடியாதா!?

    //ஜான் டேவிட்டும் இங்கே படித்திருக்கிறார்.//

    அய்யோ.. raggingல மாட்டுனாரே.. அவருங்களா??

    //முக்கால்வாசி நேரம் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருந்தது. அங்கே ஒரு கல்கியையோ, சாண்டில்யனையோ எடுத்துக்கொண்டு இந்த இடத்துக்கு வந்துவிடுவேன்.//

    கட் அடிச்சாலும் library போய் books படிக்கிறீங்களா?? நீங்க நல்லவங்க...

    //ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்.//

    பாராட்ட படவேண்டிய விசயம்....

    சுமார் 10 வருடங்களுக்கு முன் கருர்க்கு விஜயம் செய்தேன்.. என் கல்லூரி நன்பனின் வீட்டில் தங்கியிருந்தேன்.. திண்ணப்பா திரையரங்கு அருகில் தான் அவனுடைய வீடு.. அன்று இரவு ஹோட்டலில் சாப்பாடு.. ஒரு கை பார்த்துட்டேன்ல....

    ReplyDelete
  2. \\இதுதான் திண்ணப்பா திரையரங்கம். இந்த திரையரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொருக் காட்சியிலும் படம் திரையிடப் படுவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும். மக்களும் எழுந்து நிற்பார்கள். இது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\\

    நல்ல பழக்கம் தான்..அருமையாக உள்ளது உங்கள் ஊர்...

    ReplyDelete
  3. /
    k4karthik said...
    "ஊர் சுற்றலாம் வாங்க" program மாதிரி இருக்கு...

    /

    வாங்க கார்த்திக்,

    ஊர் சுத்திட்டுதான் வந்திருக்கேன்.

    /இப்படி அக்கறையே இல்லாம இருக்காங்களே... மாத்த முடியாதா!?/

    இப்போதான் சுத்திகரிப்பு நிலையங்கள் வந்திருக்கு. ஆனாலும் எல்லா சாயப்பட்டறைகளும் அதப் பயன்படுத்துறதில்ல. :(

    /அய்யோ.. raggingல மாட்டுனாரே.. அவருங்களா?? /

    பயப்படாதீங்க... பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல எல்லாப் போட்டிகள்லையும் கலந்துகிட்டு பரிசு வாங்கற ஆளாம்!!! பின்னாடி கொலை செய்யற அளவுக்கு மாறிப் போயிட்டார்...

    /கட் அடிச்சாலும் library போய் books படிக்கிறீங்களா?? நீங்க நல்லவங்க.../

    என்ன இந்தியப் பொருளாதாரத்தப் பத்தியாப் படிச்சேன்? கதை தான் படிச்சேன் :)

    /பாராட்ட படவேண்டிய விசயம்..../

    ஆமாங்க...


    /சுமார் 10 வருடங்களுக்கு முன் கருர்க்கு விஜயம் செய்தேன்.. என் கல்லூரி நன்பனின் வீட்டில் தங்கியிருந்தேன்.. திண்ணப்பா திரையரங்கு அருகில் தான் அவனுடைய வீடு.. அன்று இரவு ஹோட்டலில் சாப்பாடு.. ஒரு கை பார்த்துட்டேன்ல.... /

    ஒரு ரெண்டு கை பார்க்க வேணாமா? :)

    ReplyDelete
  4. கரூரில் 4 வருடம் வாழ்ந்திருக்கிறேன். 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை படித்தது அங்குதான். 4-5 சி.எஸ்.ஐ பள்ளி. 6-7 புகழ்வாய்ந்த M.H.S.S....

    தொலைத்துவிட்ட, ஆனால் மறக்காத சில நட்புகள் உண்டு. என்னோடு கூட படித்த மணிகண்டனை என்றாவது சந்தித்தால் மகிழ்வேன்.

    திண்ணப்பா தியேட்டருக்கு பின்புறம்தான் சிலகாலம் குடியிருந்தோம்

    ஞாபகம் வருதெ! ஞாபகம் வருதே!!

    ReplyDelete
  5. வாங்க கோபி,

    /நல்ல பழக்கம் தான்..அருமையாக உள்ளது உங்கள் ஊர்.../

    ஆமாங்க... சொந்த ஊருன்னா சும்மாவா? :-)))

    ReplyDelete
  6. வாங்க முத்துகுமரன்,

    முதல்வருகைனு நினைக்கிறேன்.

    /
    கரூரில் 4 வருடம் வாழ்ந்திருக்கிறேன். 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை படித்தது அங்குதான். 4-5 சி.எஸ்.ஐ பள்ளி. 6-7 புகழ்வாய்ந்த M.H.S.S..../

    ஓ நீங்களும் எம்மெச்சஸ்ல படிச்சிருக்கீங்களா? அப்ப எனக்கெல்லாம் சீனியர்னு சொல்லுங்க!!

    / தொலைத்துவிட்ட, ஆனால் மறக்காத சில நட்புகள் உண்டு. என்னோடு கூட படித்த மணிகண்டனை என்றாவது சந்தித்தால் மகிழ்வேன்./

    என்ன செய்வது சிலரது நினைவுகள் மட்டுமே நம்மோடு வாழும்! சீக்கிரமே மணிகண்டனை சந்திக்க வாழ்த்துக்கள்!

    / திண்ணப்பா தியேட்டருக்கு பின்புறம்தான் சிலகாலம் குடியிருந்தோம்

    ஞாபகம் வருதெ! ஞாபகம் வருதே!! /

    ஆட்டோகிராப் படம் அந்த திரையரங்கத்துல போடல :-)

    ReplyDelete
  7. அன்புள்ள அருட்பெருங்கோ,

    கரூர் படங்களை பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம். எனக்கும் கரூர்தான் சொந்த ஊர். அதே M.H.ஸ்.ஸ் தான். (+2 1984- 86) ; 2001இல் இருந்து சென்னை வாசம். பெற்றோர் , உற்றார் இன்னும் அங்கேதான்.

    அன்புடன்

    அதியமான்
    http://nellikkani.blogspot.com/

    ReplyDelete
  8. / அன்புள்ள அருட்பெருங்கோ,

    கரூர் படங்களை பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம். எனக்கும் கரூர்தான் சொந்த ஊர். அதே M.H.ஸ்.ஸ் தான். (+2 1984- 86) ; 2001இல் இருந்து சென்னை வாசம். பெற்றோர் , உற்றார் இன்னும் அங்கேதான்.

    அன்புடன்

    அதியமான்
    http://nellikkani.blogspot.com//

    அதியமான், நீங்களும் கரூரா??? :)

    நான் +2 முடிச்சது 2000லங்க... உங்களுக்கு ரொம்ப ஜூனியர் :))

    ReplyDelete
  9. Naan intha schoolku vanthu irukennu nenaikaran...naan konja naal velurla padichan...appo hinidi seminarku varuvoaam....intha school mathiri than nabagam......appo oru varusam seminar kattu adichutu ajanta theatrela cinema parthathu innum nabagam iruka....muthal muraya appo than cut adika kathukittan...appurum athula Ph.d vangunathu vera visayam....appo en kuda eruntha nanbargal yarukittayum enaku ippo contact illa...neraya nalla manitharkala tholachuttan.........remba varuthama eruka....

    Anbudan,
    Inder

    P.s: appurum konjum tamila type adika solli kudungalan

    ReplyDelete
  10. /Naan intha schoolku vanthu irukennu nenaikaran...naan konja naal velurla padichan...appo hinidi seminarku varuvoaam....intha school mathiri than nabagam......appo oru varusam seminar kattu adichutu ajanta theatrela cinema parthathu innum nabagam iruka....muthal muraya appo than cut adika kathukittan...appurum athula Ph.d vangunathu vera visayam....appo en kuda eruntha nanbargal yarukittayum enaku ippo contact illa...neraya nalla manitharkala tholachuttan.........remba varuthama eruka....

    Anbudan,
    Inder/

    என்னமோ செமினார்னு படிப்பு சம்பந்தமா எல்லாம் சொல்றீங்க... அப்படின்னா கண்டிப்பா அது எங்க பள்ளியா இருக்காது. சி.எஸ். ஐ யா இருக்கும்!!! இப்போதான் ஆர்குட் இருக்கே தேடுங்க எதோ ஒரு மூலையில இருப்பாங்க :)

    /P.s: appurum konjum tamila type adika solli kudungalan/

    தமிழில் தட்டச்ச

    ReplyDelete
  11. பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அருட்பெருங்கோ.

    ReplyDelete
  12. / பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அருட்பெருங்கோ./

    பகிர்ந்தவற்றை நுகர்ந்து கொண்டமைக்கு நன்றி மாசிலா!!!

    ReplyDelete
  13. நீங்க சிவா சாம் ராஜா?
    M.H.S.S ல நீங்க ௨000 ல 12th முடிசீங்களா?

    ReplyDelete
  14. /நீங்க சிவா சாம் ராஜா?
    M.H.S.S ல நீங்க 2000 ல 12th முடிசீங்களா?/

    ஆமாப்பா :) நான் அவனே தான்!!!

    ReplyDelete
  15. இது தன்ராஜ் உன்கூட படிச்ச ஒரு மாணவன். உன்னை போல நான் தமிழ் பற்றுடனும் நூலகத்தில் கதை படிக்கவில்லை.
    நல்லா எழுதற உன் கதை சொல்லும் நடை நன்றாக உள்ளது.

    இப்படிக்கு
    தன்ராஜ்

    ReplyDelete
  16. ஆகா நம்ம ஊரு, அட நான் கூட கருர்ல 18 வருசம் இருந்தென்...

    79-85 St Theresas School, MHSS from 85 to 91 class 6th to 12th and 91-94 in Govt Arts college.

    ReplyDelete
  17. திண்ணப்பா தியேட்டருக்கு பின்புறம்தான் சிலகாலம் குடியிருந்தோம்

    ஞாபகம் வருதெ! ஞாபகம் வருதே!!

    I was also there for 10 years in sengunthapuram 5th cross

    ReplyDelete