Wednesday, November 30, 2005

இவர் காதலர் யார்?

அன்பே அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்

சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்

சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்

வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்

வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும்

விரும்பி இரசிக்கிறேன்

உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்
உன் ஸ்பரிசம் தான்


நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?

உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்

சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்

காற்றே!




No comments:

Post a Comment