Tuesday, November 29, 2005

அடிமையைப் போல...

அந்த மூன்று முடிச்சுக்கள் என் குரல்வளையை நெரிக்கும்
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - தாலி கட்டிக் கொள்ள...

வீட்டுச்சிறையின் கைதிக்கான கைவிலங்குதான் அது
எனத் தெரிந்தும் சம்மதிக்கிறேன் - வளையல் போட்டுக் கொள்ள...

பின் தூங்கி முன் எழ வேண்டுமா ? எழுகிறேன்...
கணவனை கடவுளாகத் தொழ வேண்டுமா ? தொழுகிறேன்...

எல்லாப் பெண்களைப் போலவும்
அடிமையாக வாழ சம்மதிக்கிறேன்...

யாரேனும் ஏற்றுக்கொண்டால்...

நன்றியுடன்,
ஒரு விதவை.

1 comment:

  1. thought-provoking, mootable pv. just my thoughts, well anyways gl & be chipper is what i say

    ReplyDelete