~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் தொடாமல் தான்
பேசுகிறோம்…ஆனால்,
காற்றில் கைகோர்த்து
விளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதலில் கட்டிப் போடும் என்னைக்
கண்களாலேயேக் கட்டிப் போடுகிறாய்…
இதுதான் “கண்கட்டி வித்தை” என்பதா??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல் பார்வையில் நீ அழகு…
மறு பார்வையில் பேரழகு...
யாரிடம் பெற்றாயோ,
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைக் கவிதை என்றேன்!
ஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாருமற்றத் தனிமையில்
என்னோடுக் குடும்பம் நடத்துகிறது…
குடும்பத்தோடு இருக்கையில்
என்னைத் தனிமைப் படுத்துகிறது…
உன் நினைவு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு தண்டவாளமாய் நீ!
மறு தண்டவாளமாய் நான்!
நமக்கேத் தெரியாமல்
நம்மீது பயணிக்கிறது
காதல் ரயில்!!
( பின்குறிப்பு :
இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, அமராவதி ஆத்தங்கரை! )
mmmm கலக்குங்க...
ReplyDeleteஇரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகைகோர்த்து விளையாடும்
ReplyDeleteகண்கட்டிவித்தை செய்யும்
அழகு பேரழகாகும்
செல்லமாக கோபித்துக்கொள்ளும்
கொண்டபின் குடும்பம் நடத்தும்
நினைவோடு தனிமைபடுத்தும்
பயணிக்கட்டும் காதலாய்
ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!
அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :))
காதல் பெருக்கெடுத்து
ReplyDeleteவெள்ளமாய் பாய்கிறது
அமராவதி ஆற்றில் ...
துள்ளி விளையாடும்
மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ ...
கரையோரம் அமர்ந்து
மீன் விளையாட்டை ரசித்தபடி
காதல் பருகும்
நாங்கள் ...
/காற்றில் கைகோர்த்து
ReplyDeleteவிளையாடுகின்றன…
நாம் பேசிய வார்த்தைகள்!/
நன்றாய் இருக்கிறது..
நீவிர்
காதல் பெறும் கோ....
/உன்னைக் கவிதை என்றேன்!
ReplyDeleteஏன் காதல் கவிதையென்று
சொல்லவில்லையெனக்
கோபித்துக்கொண்டால்
நான் என்ன செய்வது?/
அப்புறம் கோபம் போனதா இல்லையா?:) பெண்களின் மன இயல்பைக் காட்டும் அழகிய வரிகள்.
ஷைலஜா
/mmmm கலக்குங்க... /
ReplyDeleteநீங்க ஊக்கம் கொடுக்கும்போது என்ன பிரச்சினை? :)
கலக்கலாம்!!!
இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete/இரண்டாமாண்டில் அடியெடுத்துவைக்கும் காதலுக்கு வாழ்த்துகள். /
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க... ஓ சுதர்சன்!!!
/கைகோர்த்து விளையாடும்
ReplyDeleteகண்கட்டிவித்தை செய்யும்
அழகு பேரழகாகும்
செல்லமாக கோபித்துக்கொள்ளும்
கொண்டபின் குடும்பம் நடத்தும்
நினைவோடு தனிமைபடுத்தும்
பயணிக்கட்டும் காதலாய்
ரயில் ஆண்டாண்டுகாலமாய் !!/
கவிதைகளையெல்லாம் குளிப்பாட்டி ஒரு கவிதையா? நன்றி...
//அருளுக்கு கிட்டிய காதல் அமராவதியாய் பொங்கி ஓடட்டும் :)) //
என்னது ஓடட்டுமா??? :((((
//காதல் பெருக்கெடுத்து
ReplyDeleteவெள்ளமாய் பாய்கிறது
அமராவதி ஆற்றில் ...//
அமராவதி ஆத்துல இப்போக் சாயக்கழிவுதான் போயிக்கிட்டு இருக்கு...
//துள்ளி விளையாடும்
மீன்குஞ்சாய் அருட்பெருங்கோ ...//
நண்பா நீயுமா? :(
//கரையோரம் அமர்ந்து
மீன் விளையாட்டை ரசித்தபடி
காதல் பருகும்
நாங்கள் ... //
!!!
/உங்கள் கவிதை உண்மையில் சூப்பர்.உங்கள் காதல் இதில் பிரதிபலிக்கின்றது. /
ReplyDeleteநன்றி ஜொள்ளுப்பேச்சி...
வருகைக்கும் தருகைக்கும்!!!
//நன்றாய் இருக்கிறது..
ReplyDeleteநீவிர்
காதல் பெறும் கோ.... //
நன்றி சாத்வீகன்...