Sunday, March 23, 2008

காதல் தேடும் வாழ்த்து

எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல...
காதலில் தேடலும் சுகம்தான்!
*

31 comments:

  1. //தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//


    நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா சரி யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.

    காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள்!

    ReplyDelete
  3. (கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
    எனக்கு வருத்தமாயிருக்கிறது.
    ஓவியனாய்ப் பிறக்கவில்லையென)

    Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up

    ReplyDelete
  4. ஆகா...ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))


    மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))

    ReplyDelete
  5. \\கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
    எனக்கு வருத்தமாயிருக்கிறது.
    ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!\\

    சூப்பரு ;)

    ReplyDelete
  6. அருமையான கவிதை!!!!!

    உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
    எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
    இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
    ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!//


    அருமையான வரிகள்!!!!

    பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!

    ReplyDelete
  7. //நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
    ஊடலும் கூடலும் மட்டுமல்ல...
    காதலில் தேடலும் சுகம்தான்!/
    adada... super lines :)

    nice kavidhai..

    ReplyDelete
  8. //தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//

    எனக்கு பிடித்த அருமையான வரிகள்.....

    ReplyDelete
  9. Hi Arul...

    Arumaiyana Kavithaigal....


    Senthil
    Bangalore

    ReplyDelete
  10. //இதுவரை நீ வந்த
    கனவுகளையெல்லாம் சேர்த்து
    ஒரே கனவாக காணும்
    ஓர் இரவு கிடைக்குமா?//

    எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!

    ReplyDelete
  11. hi many more happy returns of the day Arul.

    ReplyDelete
  12. en kavi?
    kavingana imsikiradhu podadha?
    oviyana vera avadhaaram edukka aasaiya?

    arumaiyana varigal... vaazhthukkal

    Belated birthday wishes!!!!

    ReplyDelete
  13. நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
    ஊடலும் கூடலும் மட்டுமல்ல...
    காதலில் தேடலும் சுகம்தான்!

    superb...

    ReplyDelete
  14. \நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா\

    அடப்பாவி நல்ல எண்ணம்யா!

    \யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.\

    வாழ்த்துகள் ;-)

    \காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா\

    சங்கத்த மொதல்ல கலைங்கப்பா!

    ReplyDelete
  15. /அருமையான கவிதைகள்!/

    நன்றிங்க வீரசுந்தர்

    ReplyDelete
  16. /Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up/

    வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க முக்கியப்புள்ளி!

    ReplyDelete
  17. /ஆகா...ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))/

    குசும்பா? அப்படின்னா? இது கவுஜ மாப்ள ;)

    /மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))/

    ரொம்ப ரொம்ப தாமதமான நன்றி மாப்பி! ஆணித்தொல்ல அதிகமாப்போச்சு!

    /சூப்பரு ;)/
    நன்றி !!!

    ReplyDelete
  18. /அருமையான வரிகள்!!!!

    பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!/

    நன்றிங்க எழில்!!!

    ReplyDelete
  19. /nice kavidhai../

    நன்றிங்க ட்ரீம்ஸ்!

    ReplyDelete
  20. /எனக்கு பிடித்த அருமையான வரிகள்...../

    /hi many more happy returns of the day Arul./

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீ!

    ReplyDelete
  21. /Arumaiyana Kavithaigal..../

    நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  22. /எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!/

    கவிதைய வாசிச்சதுக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!

    ReplyDelete
  23. /superb.../

    நன்றி கோபால்!

    ReplyDelete
  24. \\தூசிவிழுந்த இடக்கண்ணில்
    நீ ஊதிவிடுவதைக் கண்டு
    பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!\\

    ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!

    Belated Birthday wishes ,
    God bless you!!

    ReplyDelete
  25. ///உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
    எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
    இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
    ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!///


    இது ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  26. தேடல் நல்லாருக்கு ;-))

    ReplyDelete
  27. Really very nice thinking!!!!!!!!!!!!!1

    Supreb!!!!!

    Great Man!!!!!!!!!!!

    ReplyDelete
  28. /ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!/
    நன்றி திவ்யா!

    /Belated Birthday wishes ,
    God bless you!!/
    இதற்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  29. /தேடல் நல்லாருக்கு ;-))/
    நன்றிங்க சகாரா!

    ReplyDelete
  30. /Really very nice thinking!!!!!!!!!!!!!1

    Supreb!!!!!

    Great Man!!!!!!!!!!!/
    நன்றிங்க சத்யா!

    ReplyDelete
  31. /இது ரொம்ப பிடிச்சிருக்கு./
    நன்றிங்க நல்லவன்!

    ReplyDelete